மீண்டும் தமிழில் மதுபாலா

பாலசந்தரின், "அழகன் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர், மதுபாலா. இதற்கு பின், மணிரத்னத்தின், "ரோஜா வில் ஹீரோயினாக நடித்ததால், பாலிவுட், இவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. 

தமிழில், சில படங்களில் நடித்தாலும், பாலிவுட்டிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினார். பாலிவுட்டில், அதிக வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. பின், திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கையில், கவனம் செலுத்தினார். 

இதனால், பட வாய்ப்புகள் குறைந்தன. சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்தார். எதிர்பார்த்த அளவு, வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில், "டிவி சீரியலில் நடித்தார். 

பெரிய அளவில், வரவேற்பு இல்லாததால், சினிமா வெளிச்சத்திலிருந்து விலகியிருந்த மது பாலா, இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணா இயக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம், ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்பதால், உற்சாகத்தில் இருக்கிறார், மதுபாலா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...