தாய்குலத்திடம் புலம்பிய கோ பட நடிகை


கோ பட நாயகி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அதனால் கிராமத்து வாழ்க்கை என்பது அவருக்கு சுத்தமாக தெரியாத ஒன்று. இருப்பினும் அம்மா சொன்னதிற்கிணங்க அந்த கிராமத்து இயக்குனரின் படத்தில் நடித்தார். 

ஆட்டுக்குட்டிகள் அடைக்கும் பட்டியில்கூட நாள்கணக்கில் மூக்கை பொத்திக்கொண்டு நடித்தார். காரணம், அந்த டைரக்டரின் படத்தில் நடித்தால் உனது திறமை வளரும், விருதுகூட கிடைக்கும் என்று அம்மா சொன்னதினால்தான். 

ஆனால் இப்போது படமே ஓடவில்லை என்பதால் அம்மா மீது செம காண்டாகி விட்டாராம் நடிகை. ஒரு வருசத்துக்கும் மேலாக அந்த படத்துக்காக பல படங்களை விட்டுட்டு நடிச்சேன். குறைச்சலான சம்பளம் என்றாலும், பெரிய டைரக்டர் படமாச்சேன்னு எல்லாத்தையும பொறுத்துக்கிட்டேன். அதோட, நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக அரைநிர்வாணமா கூட நடிச்சேன்.

இப்போ படமும் ஓடல, எனக்கு அதை வச்சு ஒரு படமும் கெடைக்கல. ஆட்டுமந்தை கூட்டத்தோட ஒரு வருசமாக நான் நடிச்சதுதான் மிச்சம். எப்படியோ உங்க விருப்பத்துக்காக என் மனச கட்டுப்படுத்திக்கிட்டு அந்த படத்துல நடிச்சேன. இப்ப அத்தனை கஷ்டப்பட்டு நடிச்சு ஒரு பலனும் இல்லை என்று தாய்குலத்திடம் சொல்லி புலம்புகிறாராம் நடிகை.

இதை சற்றும் எதிர்பார்க்காத இரண்டெழுத்து மாஜி நடிகையும், மகளிடம் மன்னிப்பு கேட்காத குறையாய், இனிமேல் உன் சினிமா வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன். உனக்கு எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த படத்தில் நீ நடிக்கலாம் என்று மகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டாராம். 

அதனால் இதுவரை எடுத்ததற்கெல்லாம் அம்மாவின் முகத்தை பார்த்த கோ பட நாயகி, இப்போது புதிய படங்களுக்கான கதையை தானே கேட்டும் முடிவு செய்யும் அளவுக்கு மாறியுள்ளார். அதேசமயம் இனிமேல் எக்காரணம கொண்டும் நான் கிராமத்து கதைகளில் நடிக்க மாட்டேன என்பதை தனது கொள்கையாகவே கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார் நடிகை.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...