நயன நடிகையை நெருங்கும் ஆந்திர ஹீரோக்கள்


விரல்வித்தை, நடன சூறாவளி ஆகிய நடிகர்களால் காதலிக்கப்பட்டு பின்னர் கழட்டிவிடப்பட்ட அந்த நயன நடிகை, இப்போது ஆண் வாசனையே இல்லாமல் பிரமச்சர்யம் கடைபிடிக்கப்போவதாக அறிவித்து வருகிறார். 

அதனால், கவர்ச்சிகரமான உடைகள் அணிந்து நடித்தாலும், மற்ற நேரங்களில் போர்த்திக்கொண்டுதான் வெளியே வருகிறார். 

அதோடு, கடலை போடும் சில நடிகர்களைக்கண்டால் கண்டும் காணாததும் போல் விலகியே செல்கிறார் நடிகை.

ஆனால், அம்மணியின் ஓரக்கண்ணில் ஏற்கனவே விழுந்து கிடக்கும் சில ஆந்திர தேசத்து ஹீரோக்கள் அவரை தங்கள் பக்கம் இழுக்கும் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம். 

ஆனால் முதல் ரவுண்டில் அவர்களுடன் கட்டிக்கலந்தாடிய நடிகையோ, இப்போது அவர்களை விரோதி போலவே பாவிக்கிறாராம்.

ஆனாலும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் விடுவதாக இல்லையாம். நடிகை ஐதராபாத்தில் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கும் அவ்வப்போது விசிட் அடித்து பழைய நட்பை புதுப்பிக்க பலசுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம். 

என்றாலும் அவர்களுக்கு பிடிகொடுக்காமல் கழுவுற மீனில் நழுவுற மீனாய் எஸ்கேப்பாகி வரும் நடிகை, இப்போது தனது சேப்டிக்காக தான் ஐதராபாத்தில் தங்கும் நாட்களில் தன்னுடன் தனது பெற்றோரையும் கொண்டு வைத்துக் கொள்கிறாராம். 

இதனால் அம்மணியை நெருங்க முடியாமல் அலைபாய்ந்து கொண்டு திரிகிறார்களாம் மேற்படி நடிகர்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...