ரகசிய பார்ட்டி கொடுக்கும் அகர்வால் நடிகை


தற்போது தளபதி நடிகரின் மூன்றெழுத்து படத்தில் நடித்து வரும் அந்த அகர்வால் நடிகைக்கு அடுத்தபடியாக புதிய படங்கள் எதுவுமே இல்லை. அதனால் எதிர்கால சினிமாவைப்பற்றி புலம்பிக்கொண்டிருந்தார் நடிகை. 

இதற்கு காரணம், சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியது மட்டுமின்றி, நரை முடி நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று தான் வெளிப்படையாக சொன்னதுதான் என்பதை புரிந்து கொண்ட நடிகை, இப்போது தான் அதை வாபஸ் பெற்று விட்டதாக சிலரிடம் கூறி வருகிறார். 

இருப்பினும், அந்த சமயத்தில் அம்மணியின் பேச்சு அதிரடியாக இருந்ததால், அதை மனதில் வைத்துக்கொண்டு யாரும் அவரை நெருங்கவே தயங்குகிறார்களாம்.

தற்போது இந்தி, தெலுங்கு போன்ற மொழியிலும் புதிய படங்கள் கிடைப்பதற்கான அறிகுறிகள் இல்லாததால், சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் முகாமிட்டுள்ள அகர்வால் நடிகை, சில மேல்தட்டு ஹீரோக்களை ஹோட்டலுக்கு வரவைத்து ரகசிய பார்ட்டி கொடுப்பதாக கூறப்படுகிறது. 

இப்படி சென்ற சில ஹீரோக்கள் அம்மணியின் அன்புச்சிறைக்குள்ளும் சிக்கியிருப்பதோடு, கூடிய சீக்கிரமே படத்தோடு வருகிறோம் என்று நடிகைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களாம். 

அப்படி சொன்னவர்கள் அனைவருமே மார்க்கெட்டில் மூச்சு விடகூட நேரமில்லாமல் பிசியாக இருக்கும் நடிகர்கள் என்பதால், மேற்படி நடிகர்கள் மீண்டும் அகர்வாலையும் பிசியாக்கி விடுவார்கள் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...