காமெடியன் அலம்பல், கதாநாயகன் அப்செட்


கோலிவுட்டில் உள்ள பெரும்பாலான கதாநாயகர்கள், அந்த ஐந்தெழுத்து காமெடியனை நம்பிதான் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். 

தங்களது நடிப்புக்காக, கதைக்காக படம் ஓடவில்லை என்றாலும், அந்த நடிகரின் காமெடிக்காகவாவது படம் ஓடாதா என்று நினைக்கிறார்கள். 

இதனால் அவர் படத்துக்குப்படம் லட்சங்களை உயர்த்திக்கொண்டே போனாலும், கேட்டதை கொடுத்து ஆளை பிடியுங்கள் என்று படாதிபதிகளை விரட்டி விடுகிறார்கள்.

இந்த நிலையில், சகுனி நடிகர் மட்டும் மேற்படி காமெடியன் மீது சென்ற படத்திலிருந்தே வெறுப்பில் இருந்து வருகிறார். 

என்ன காரணம்? என்று விசாரித்துப்பார்த்தால், இயக்குனர் ஒரு காட்சியை சொல்லி, டயலாக்கை சொன்னால், காமெடியனோ தன் பங்குக்கு அதிகப்படியான லொள்ளு வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு ஹீரோவை டம்மி பீசாக்கி விடுகிறாராம்.

இதனால் நான் ஹீரோ, என்னை இவர் டம்மி பண்ணுவதா? என்று பல சமயங்களில் போர்க்கொடி பிடித்து விடுகிறாராம் ஹீரோ. இந்த புகைச்சல் காரணமாத்தான் தற்போது நடித்து வரும் அந்த காமெடி இயக்குனரின் படத்துக்கு அவரை வேண்டாம் என்று சொன்னாராம் ஹீரோ. 

ஆனால், இயக்குனர் விடவில்லை. அவர் எனது செண்டிமென்ட் காமெடியன். எனது முதல் படத்திலிருந்தே அவர் இருக்கிறார். அவரை வைத்துதான் எனது காமெடியும் ஒர்க்அவுட்டாகி வருகிறது என்று அவரது முக்கியத்துவத்தை சொல்லி கூட்டணியில் சேர்த்துக்கொண்டாராம்.

அதனால், இப்போது காமெடியனின் அலம்பம் ரொம்ப ஓவராகவே இருக்கிறதாம். அதைப்பார்த்து அப்செட்டாகவே இருக்கிறாராம் ஹீரோ.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...