தயாராகிறது முதல்வன் இரண்டாம் பாகம்


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷாகொய்ராலா, ரகுவரன் ஆகியோர் நடித்த படம் முதல்வன். ஒருநாள் முதல்வர் என்ற கருத்தை மையமாக வைத்து புதுமையான முறையில் இயக்கியிருந்தார் ஷங்கர். 

அதனால் தமிழகத்தில் அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால், அதே படத்தை இந்தியிலும் நாயக் என்ற பெயரில் அனில்கபூரை நாயகனாக வைத்து இயக்கினார் ஷங்கர். 

ஆனால், தமிழில் வெற்றி பெற்ற அளவுக்கு இந்தியில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. 

இந்த நிலையில், தற்போது விஸ்வரூபம் -2, ஜெய்ஷிந்த்-2, சிங்கம்-2 என ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகங்கள் கோடம்பாக்கத்தில் உருவாகி வருகின்றன. 

இருப்பினும், முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுப்பது பற்றி இன்னமும் ஷங்கர் யோசிக்கவில்லை. 

ஆனால், அப்படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தை தயாரித்த பட நிறுவனம் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம்.

நாயக் ரிட்டர்ன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை இந்தி இயக்குனர் ஒருவரே இயக்குகிறாராம்.அதற்கான கதை விவாதம் நடந்து வரும் நிலையில், ஹீரோ -ஹீரோயினி தேர்வும் நடைபெறுகிறதாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...