இந்தி, மலையாளத்தில் ரீமேக் ஆகிறது சூதுகவ்வும்


விஜய்சேதுபதி, சஞ்சனா ஷெட்டி நடிப்பில் புதுமுகம் நலன் குமாரசாமி இயக்கிய சூதுகவ்வும் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தை இந்தியிலும், மலையாளத்திலும் ரீமேக் செய்கிறார்கள். 

இதன் ரீமேக் உரிமையை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண்பாண்டியன், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் வாங்கி இருந்தனர். 

இப்போது அவர்களிடம் இருந்து இந்திப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டி வாங்கி தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்து அவரே இயக்குகிறார். 

ரோஹித் ஷெட்டி சமீபத்தில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தை இயக்கியவர். 

இந்தி சூதுகவ்வுமில் விஜய்சேதுபதி கேரக்டரில் இம்ரான் கானும், சஞ்சிதா ஷெட்டி கேரக்டரில் ஷரத்தா கபூரும் நடிக்கிறார்கள். 

இதற்கான ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்தானது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

அதேபோல சூதுகவ்வும் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது. அருண்பாண்டியன் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்கள். திலீப், நஸ்ரியா நடிக்கலாம் என்று தெரிகிறது. இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை. 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...