சீரியசாக திட்டம் தீட்டும் தாடிவாலா

தாடிக்கார டைரக்டரின் புதல்வரை வைத்து படம் பண்ணி வெளியே வர வேண்டுமென்றால் அவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

அப்படி புண்ணியம் செய்யாத யார் அவரை வைத்து படம் தயாரித்தாலும் அவர்கள் காலிதான். இந்த உண்மை தெரிந்ததால்தானோ என்னவோ புத்திசாலித்தனமாக மேற்படி நடிகரை வைத்து தான் இயக்கும் படத்திற்கு அவரையே தயாரிப்பாளராக்கியிருக்கிறார் மெரினா இயக்குனர். 


ஆனால், எப்போதோ ஆரம்பிக்க வேண்டிய படம் இன்னமும் ஒரு அடிகூட நகராமல் நிற்கிறது. அதுகுறித்து மெரினா டைரக்டர் கேட்டபோது, ரெண்டு வருசமா ஒரே தயாரிப்பாளரோட ரெண்டு படத்துல நடிச்சிக்கட்டு வர்றேன். 

அவரே படத்தை எப்ப முடிச்சுக்கொடுப்பீங்கன்னு எங்கிட்ட கேட்கல. அப்படியிருக்க உங்களுககு என்ன அவசரம்? என்கிறாராம்.



இந்த சேதி நடிகரின் தந்தைகுலத்தின் காதுக்கு சென்றபோது ஷாக்காகி விட்டாராம். இதுவரை நடிச்ச படமெல்லாம் அடுத்தவங்க காசுல தயாரிச்ச படம். 

ஆனா இப்ப மகன் நடிக்கப்போறது நம்ம சொந்த காசுல தயாரிக்கிற படமாச்சே. கொஞ்சம் அசந்தா, சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்ட கதையா போயிடுமோ என்று தாடியை சொறிந்து கொண்டு நிற்கும் நடிகர், ப்ளான் பண்ணி, எண்ணி 60, 70 நாள்ல படத்தை முடிச்சிடணும். 

தினமும் ஸ்பாட்டுக்கு மகனோட பி.ஏ மாதிரி கூடவே போனாதான் வேலை நடக்கும். இல்ல மத்த தயாரிப்பாளருங்களுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் என்று சீரியசாக திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாராம் தாடிவாலா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...