ஆர்யாவுடன் ஜோடி சேர மறுத்த நயன்தாரா


பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி என ஆர்யா-நயன்தாரா இருவரும் கூட்டணி அமைத்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. 

அதோடு அவர்களது கெமிஸ்ட்ரியும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதனால் அவர்களைப்பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், ராஜாராணி படத்தை இயக்கிய அட்லீ, மீண்டும் தான் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா-நயன்தாராவை ஜோடி சேர்க்க ஆசைப்பட்டாராம். 

ஆனால், அதற்கு ஆர்யா டபுள் ஓ.கே சொன்னபோதும், நயன்தாரா ஒத்துக்கொள்ளவில்லையாம். காரணம் கேட்டதற்கு, உங்கள் டைரக்ஷனில் நடிப்பதுபற்றி பிரச்னை இல்லை. 

ஆனால், ஆர்யா ஹீரோவாக இருப்பதால் மீண்டும் மீண்டும் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டேயிருக்கும். இதனால் மற்ற நடிகர்கள் என்னுடன் நடிக்க தயங்கும் நிலை உருவாகும். 

அதனால், உடனடியாக அவருடன் நடிக்காமல் சிறிது இடைவெளி விட்டு நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன் என்றாராம்.

ஆனால் இந்த செய்தி எப்படியோ நஸ்ரியாவின் காதுகளுக்குச்செல்ல, உடனே அட்லீக்கு போன் போட்டு நான் ஆர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே கால்சீட் டைரியை ப்ரீ பண்ணியே வைத்திருக்கிறேன் என்றாராம். விளைவு, கதையே சொல்லாமல் ஆர்யா-நஸ்ரியாவை மீண்டும் ஜோடி சேர்க்க ஒப்பந்தம் செய்து விட்டாராம் அட்லீ.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...