நான்கெழுத்து நடிகையை சூடேத்திய ஆவேசப்பேச்சு


சித்தியுடன் கோபித்துக்கொண்டு ஆந்திராவில் இருக்கும் பெற்றோருடன் ஐக்கியமாகி விட்ட அந்த நான்கெழுத்து நடிகையைப்பற்றி சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் காரசாரமான விவாதம் நடந்தது. 

அப்போது அவர் தன் படத்தை பாதியில் விட்டுச்சென்றதற்கு யாருமே நியாயம் கேட்கவிலலை என்று புலம்பினார் ஒரு டைரக்டர். 

அதைக்கேட்டு ஆவேசமான பைட் மாஸ்டர் ஒருவர், அது போன்ற நடிகையை செருப்பால் அடிக்கணும் என்று ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார். 

இந்த செய்தி மேற்படி நடிகையின் காதுகளுக்கு செல்ல, தன்னால் பாதிக்கப்பட்ட டைரக்டருக்கு ஏதாச்சும் நஷ்டஈடு கொடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறாராம். 

அதேசமயம், தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத அந்த பைட் மாஸ்டர் எதற்காக தன்னை செருப்பால் அடிக்க துடிக்க வேண்டும் என்று கொதித்துப்போன நடிகை, அதுசம்பந்தமாக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து, ஒரு நடிகையை படப்பிடிப்பு தளத்தில் கன்னத்தில் அடித்த இயக்குனருக்கு ஒரு வருடம் படம் இயக்கக்கூடாது என்று ரெட் கார்டு போட்ட சினிமா உலகில், செருப்பால் அடித்தால் எத்தனை ஆண்டுகளுக்கு ரெட் கார்டு போடுவார்களோ தெரியவில்லையே என்றும் இது சம்பந்தமான விவாதமும் கோடம்பாக்கத்தின் மூலை முடுக்குகளில் கிண்டலாக நடந்து கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...