பஞ்சாயத்துக்கு வர இருக்கும் பட டைட்டில்கள்


தமிழ் சினிமாவுக்கும் தலைப்புக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், கில்டு இந்த மூன்று அமைப்பிலும் டைட்டில் பதிவு செய்யலாம். 

இந்த மூன்று அமைப்புகளுக்கும் சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லை. அதனால் கண்டபடி தலைப்பு பதிவு செய்து காசு செலவு செய்து விளம்பரம் செய்த பிறகு படத்தின் டைட்டிலுக்கு பிரச்னை வந்து மாற்ற வேண்டியதாகிவிடும். சில நேரத்தில் கோர்ட் வரைக்கும் சென்றுவிடுகிறார்கள். 

சமீபத்தில் ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் எல்ரெட் குமார் தான் புதிதாக தயாரிக்கும் படத்துக்கு "இல்ல ஆனாலும் இருக்கு" என்று டைட்டில் வைத்து அறிவித்தார். 

கே.எம்.சரவணன் என்பவர் "இருக்கு ஆனா இல்ல" என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார். இரண்டு படங்களுமே திகில் கதையை கொண்டது. 

அதேபோல ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் படத்திற்கு மதயானைக்கூட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

ராட்டினம் தங்கசாமி எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தை எடுத்து வருகிறார். இரண்டு படங்களின் தலைப்பும் விரைவில் பஞ்சாயத்துக்கு வரும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...