நயன்தாராவை டென்சனாக்கிய கேள்வி


சிம்புவுடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட காதலாவது அதோடு முறிந்து போனது. ஆனால், பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. 

அதனால், மும்பையில் வீடு எடுத்து தங்கியிருந்த பிரபுதேவாவுடன் அவ்வப்போது சென்று காதல் வளர்த்து வந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார்.

ஆனபோதும், கடைசி நேரத்தில் சிம்புவுடனான காதல் வெடித்து சிதறியது போன்று, கல்யாண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார் நயன்தாரா. 

அதையடுத்து பிரமச்சார்யத்தை கடைபிடித்தவரை இப்போது திரையுலகம் மீண்டும் அரவணைத்துள்ளது. அதனால் புது எனர்ஜியுடன் நடித்துக்கெணர்டிருக்கிறார் நயன்.

இந்த நேரத்தில் இனி யாருடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவே மாட்டார் என்று நினைத்தார்களோ அதே சிம்புவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும இந்த படத்தில், சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் உள்ளதாம். 

அதோடு, இப்படத்தில் கிறிஸ்தவ பெண்ணாகவே நடிக்கிறாராம் நயன்தாரா. சிம்பு இந்துவாம். அதனால், அவர்கள் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொள்வது போன்று காட்சிகள் உள்ளதாம். 

ஆக, அவர்கள் காதலர்களாக இருந்தபோது கண்ட கனவு நனவாகும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதனால் சிம்பு-நயனதாரா இருவருமே அந்த காட்சியில் அரிதாரம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்களாம்.

இந்த நேரத்தில், முதல் காதலரான சிம்புவுடன் மீண்டும் நடித்து வரும் நீங்கள், உங்களது இரண்டாவது காதலரான பிரபுதேவாவின் படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று சில ரசிகர்களை அவரிடம் கேட்டும் டென்சன் செய்து வருகின்றனர்.

அதற்கு, எனது முதல் காதலரை மன்னிக்கலாம. ஆனால் இரண்டாவது காதலரை மன்னிக்க முடியாது. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் அவரது படத்தில் நான் நடிக்க வாய்ப்பே இல்லை என்று நறுக்கென்று சொல்லி முடித்துக்கொண்டாராம் நயன்தாரா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...