மணிரத்னம் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய்


1997-ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யாராய். 

அதன்பிறகு ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். 

அதேபோல் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்டே வந்து கொண்டிருந்தார்.

மேலும், அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் நடிப்பை தொடர்ந்து வந்தார். 

ஆனால், 2010-ல் ஹீரோயின் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கர்ப்பமானதால், அதன்பிறகு நடிப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மகள் ஆரத்யாவை பெற்றெடுத்தார். 

இப்போது மகளுக்கு இரண்டரை வயதாகும் நிலையில், இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் ரீ-என்ட்ரி ஆவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னர் அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டார் ஐஸ்.

ஆனால், இப்போது அவரை அறிமுகம் செய்த மணிரத்னம் அடுத்த தமிழ், தெலுங்கில் நாகார்ஜூனா-மகேஷ்பாபுவைக் கொண்டு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

குழந்தை பெற்றெடுத்த பிறகு உடல் பெருத்து விட்டதால், இப்போது மீண்டும் தன்னை ஸ்லிம்மாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யாராய் இறங்கியிருக்கிறாராம். 

இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, நாகார்ஜூன்னாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...