அஜீத், விஜய்யாக மாறிய சிம்பு-சந்தானம்


இரண்டு ஆண்டுகளாக சிம்பு நடித்து வரும் இரண்டு படங்களில் ஒன்று வாலு, இன்னொன்று வேட்டை மன்னன். 

இந்த படங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் சிம்பு, பின்னர் அப்படியே போட்டு விட்டு வேறு படங்களில் நடிக்கச்சென்று விடுவார். 

இருப்பினும் அந்த படங்கள் இன்னமும் முடிவடையாத நிலையில, தற்போது பாண்டிராஜ், கெளதம்மேனன் இயக்கும் படங்களிலும் பிசியாகி விட்டார்.

இந்த நிலையில், தற்போது வாலு படத்தை விரைவில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கும் சிம்பு, அதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார். 

அதனால், தனது காட்பாதரின் படத்துக்கு எப்போதுமே முதலிடம் கொடுக்கும் சந்தானமும், படத்தின் நாயகியான ஹன்சிகாவும் சிம்பு கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், படத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்று திட்டமிட்ட சிம்பு, படத்தில் ஏதாவது ஒரு வகையில் அஜீத், விஜய்யை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டவர், ஒரு காட்சியில் தான் அஜீத் மாஸ்கையும், சந்தானத்தை விஜய் மாஸ்கையும் அணிந்து செல்வது போன்று படமாக்கியிருக்கிறார். 

இந்த காட்சி படத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் படம் திரைக்கு வரும்போது பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...