முருங்கைக்காயை பீல் பண்ண வைத்த டைரக்டர்கள்


லட்டு படத்தில் தனது கதையை அப்படியே கையாண்டதால் டோட்டல் அப்செட்டாகிப்போனார் முருங்கைக்காய் மன்னன். காரணம், தனது மகனை வைத்து அந்த கதையைத்தான் அவர் ரீமேக் செய்ய நினைத்திருந்தார். ஆனால், லட்டு வெளியான பிறகு அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டார்.

அதையடுத்து, மகனுக்காக ஒரு கதையை ரெடி பண்ணியவர், தான் ஏற்கனவே நடித்த ஒரு படத்தின் டைட்டீலை வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால, இப்போது அந்த டைட்டீலை அவரது சிஷ்யரான மெரினா டைரக்டர் விரல்வித்தையை வைத்து தான் இயக்கும் படத்திற்கு சூட்டி விட்டார்.

இதனால் மேலும் ஷாக்காகி இருக்கிறாராம் முருங்கைக்காய். வேட்டியைத்தானே உருவினார்கள். அதான் கோவனம் இருக்கிறதே என்று பார்த்தால், இப்போது அதையும் சேர்த்தல்லவா உருவிக்கொண்டு செல்கிறார்கள். ஆக நமக்கென்று எதையும் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கே என்று புலம்பத் தொடங்கியிருக்கிறாராம் மனிதர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...